ஆங்கிலப் புத்தாண்டு : தலைவர்கள் வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டையொட்டிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், வலிமையான வளமான நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கான கடமையைப் புதுப்பித்துக்கொள்வதற்கான தருணம் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டு நமது குடும்பங்களுக்கும், நம் நாட்டுக்கும், இந்தப் புவிக்கும் மகிழ்ச்சி, அமைதி, வளம் ஆகியவற்றைக் கொண்டுவரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள செய்தியில், மகிழ்ச்சியும் வளமும் நிரம்பிய ஆண்டாக 2020 அமையட்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தப் புத்தாண்டில் அனைவரும் நலம்பெறவும், ஒவ்வொருவரின் எண்ணங்களும் ஈடேறவும் வாழ்த்துவதாகக் குறிப்பிட்டுள்ளார்.   

Exit mobile version