பொறியியல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் – அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு

பொறியியல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

கஜா புயல் காரணமாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகள், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இணைப்பு கல்லூரிகளில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் நடைபெறுமா? இல்லையா? என்ற குழப்பம் இருந்து வந்தது.

இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பொறியியல் தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் விடுமுறை அளிப்பது பற்றி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version