பொன்னேரி அருகே எரிசாராயம் பறிமுதல்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே பறிமுதல் செய்யப்பட்ட 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயத்தை காவல்துறையினர் ஏரியில் கொட்டி அழித்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி மத்திய பிரதேசத்தில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த லாரி ஒன்றை, கும்மிடிப்பூண்டி அருகே நிறுத்தி காவல்துறையினர்,  சோதனை செய்தனர். அதில் 30 லட்ச ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் லிட்டர் எரிசாராயம் இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் உப்பங்கழி ஏரி சதுப்பு நிலத்தில் கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்டது.

Exit mobile version