பார்வையற்ற 7 மாற்றுத்திறனாளிகளுக்கு பணிநியமன ஆணை…

பார்வையற்ற 7 மாற்றுதிறனாளிகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பணிநியமன ஆணைகளை வழங்கினார். பூந்தமல்லி அரசினர் தொழிற்பயிற்சி மையத்தில் புத்தகம் கட்டும் பயிற்சி முடித்த 7 பார்வையற்ற மாற்றுதிறனாளிகளுக்கு, எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் அரசு அச்சகங்களில் இளநிலை புத்தகம் கட்டுநர் பணியிடத்திற்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் மொத்த பணியாளர்களில், 14 சதவீத பணியாளர்கள் மாற்றுதிறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியின் போது, அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமைச் செயலாளர் சண்முகம் ஆகியோட் உடனிருந்தனர்.

Exit mobile version