கொசு ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும்:சென்னை மாநகராட்சி ஆணையர்

சென்னையில் வீடு வீடாக சென்று கொசுகளை ஒழிக்கும் பணியில் ஊழியர்கள் மும்முரமாக ஈடுபட வேண்டும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில், டெங்கு பரவுவதை கட்டுப்படுத்த சென்னையில் உள்ள 15 மண்டல அலுவலர்களும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆணையர் தெரிவித்தார். சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நடத்திய ஆணையர் பிரகாஷ், சென்னையில் வீடுகள் தோறும் உற்பத்தியாகும் டெங்கு கொசுவை அழிக்க, மாநகராட்சி ஊழியர்கள் மூலம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காலி மனைகளில் சேகரமாகும் குப்பைகள் மற்றும் மழைநீரால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் எனவும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version