அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் நகரில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வாஷிங்டன் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

ஆட்கொல்லி நோயான கொரோனா வைரஸ் உலக நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் இதுவரை 32 பேர் பலியாகி உள்ள நிலையில், ஆயிரத்து 100 பேருக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வாஷிங்டன் நகரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக, மேயர் முரில் பவுசர் தெரிவித்துள்ளார். மார்ச் 31ம் தேதி வரை மக்கள் அதிகளவில் ஒன்று கூடும் விழாக்களை நடத்த வேண்டாம் எனவும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version