டெல்லி வன்முறையை கட்டுக்குள்கொண்டு வருவது குறித்து அவசர ஆலோசனை

டெல்லி வன்முறையை கட்டுக்குள்கொண்டு வருவது குறித்து, வடகிழக்கு டெல்லியின் துணை ஆணையருடன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அவசர ஆலோசனை நடத்தினார்.

டெல்லியில், மாஜ்பூர், ஜாபராபாத், சீலம்பூர் போன்ற பகுதிகளில், குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் நேற்று முன்தினம் நடைபெற்ற போராட்டங்களில் வன்முறை வெடித்தது. இரு தரப்பினருக்கும் இடையே நடைபெற்ற மோதல்களில்,  உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.

படுகாயமடைந்த 130-க்கும் அதிகமானோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர். இந்தநிலையில், வன்முறையை கட்டுப்படுத்தி பொதுமக்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வடகிழக்கு டெல்லியின் துணை ஆணையருடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, டெல்லியில் தற்போதைய நிலவரம் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

Exit mobile version