ஆகஸ்ட் 7ம் தேதி நீட் பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு நடைபெறும் -பள்ளிக்கல்வித்துறை

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு நீட் பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு 7ந் தேதி நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

அனைத்து மாவட்டங்களிலும், நீட் மற்றும் JEE போட்டித்தேர்வுக்கு, தேர்வு செய்யப்பட்டுள்ள 11 மற்றும்12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு, 7-ம் தேதி அனைத்து பள்ளிகளிலும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான வினா மற்றும் விடைக்குறிப்புகள் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தகுதித்தேர்வு விடைத்தாள்களை திருத்தி, மாணவர்கள் பெற்ற மதிப்பெண் விவரங்களை ஆகஸ்ட் 12-ம் தேதிக்குள் dsejdv@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

Exit mobile version