அந்தியூர் அருகே சாலைகளை சுற்றிவரும் யானைகள்: வாகன ஓட்டிகள் அச்சம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே சாலையில், யானைகள் சுற்றி வருவது வாகன ஓட்டிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள வனப்பகுதியில், நீர் நிலைகள் மற்றும் வன குட்டைகள் வற்றி உள்ளதால் யானைகள் தண்ணீர் மற்றும் உணவு தேடி சாலைக்கு வரும் சம்பவம் அடிக்கடி நிகழ்ந்து வருகிறது. இந்நிலையில், பர்கூர் செல்லும் வழியில் ஒற்றை யானை சாலையில் சுற்றி கொண்டிருந்தது.

யானையே கண்ட வாகன ஓட்டிகள் வாகனத்தை நிறுத்தி விட்டு, யானை சாலையை கடந்த பின்பே செல்கின்றனர். மேலும், யானைகளுக்கு இடையூறாக எவ்வித செயலிலும் ஈடுபடக்கூடாது என்றும், அருகில் சென்று புகைப்படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version