பொள்ளாச்சியில் பள்ளத்தில் விழுந்த பெண் யானை மீட்பு

பள்ளத்தில் விழுந்த பெண் யானையை, நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு பொதுமக்கள் உதவியுடன் வனத்துறையினர் மீட்ட நிகழ்வு கோவையில் நடந்துள்ளது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் உள்ள விநாயகர் – மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கஜபூஜைக்காக, ஸ்ரீரங்கத்தில் இருந்து குலாபி என்ற பெண் யானை, லாரியில் கொண்டு வரப்பட்டது. பொள்ளாச்சி அருகே மகாலிங்கபுரம் பகுதியில் யானையை, லாரியில் இருந்து இறக்கும்போது, சாலையில் இருந்த பள்ளத்தில் விழுந்தது.

இதில் யானை எழுந்திருக்க முடியாமல் திணறி வந்தது. இதையடுத்து, யானையை, கிரேன் உதவியுடன் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பத்திரமாக மீட்டனர். இதில் யானைக்கு லேசான காயம் ஏற்பட்டது.

Exit mobile version