மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை யாராலும் ஹேக் செய்ய முடியாது என இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தயாரிக்கும் குழுவில் இருந்த அமெரிக்க வாழ் இந்தியரும், சைபர் பிரிவு நிபுணருமான சையத் சுஜா, 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில், டெல்லி மாநில தேர்தல் தவிர்த்து மற்ற பகுதிகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை ஹேக் செய்ய முடிந்தது எனக் குறிப்பிட்டிருந்தார். பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரம் குறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கைகளை முன்வைத்தன. இந்நிலையில் ஹேக் செய்யப்படும் என்பதை தேர்தல் ஆணையம் முற்றிலும் மறுத்துள்ளது. மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Exit mobile version