புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அடையாள அட்டை!

வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தவர்களுக்கு, வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் நடைபெறும் முகாமில் மின்னணு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதிதாக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்த வாக்காளர்கள் அனைவருக்கும் மின்னனு வாக்காளர் அடையாள அட்டையை பதிவிறக்கம் செய்ய 2 நாள் சிறப்பு முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் ஆணைய உத்தரவுப்படி, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில், சிறப்பு முகாம்கள் நடத்த மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் முதன்முறையாக பெயர் சேர்த்தவர்கள், இந்த முகாமைப் பயன்படுத்தி, தங்களது மின்னணு அடையாள அட்டையை செல்ஃபோன் மற்றும் கணினிகளில் பதிவிறக்கம் செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version