மின்சாரம் தாக்கி ஆண் யானை பலி

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே மின்சாரம் தாக்கி ஆண் யானை பலியான சம்பவம் குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம் பெரியதண்டா பகுதியில், தங்கவேலு என்பவர், தனக்கு சொந்தமான நிலத்தில் மக்காச்சோளம் பயிரிட்டிருந்தார். இவரது விவசாய நிலத்தில் வன விலங்குகள் உள்ளே வருவதை தடுக்க, அதிக மின் அழுத்தம் கொண்ட மின் வேலிகளை அமைத்துள்ளார். இந்நிலையில், அப்பகுதிக்கு அதிகாலை உணவு தேடி வந்த யானை ஒன்று, மின் கம்பியை மிதித்த போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறை அதிகாரிகள், நிலத்தின் உரிமையாளர் தங்கவேலுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version