மேட்டூர் அனல்மின் நிலையத்தின் 2வது பிரிவில் மின் உற்பத்தி நிறுத்தம்

மேட்டூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுதுகாரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் அனல்மின் நிலையத்தின் முதல் பிரிவில் 4 அலகுகளில் தலா 210 மெகாவாட் வீதம் 840 மெகாவாட் மின் உற்பத்தியும், 2வது பிரிவில் 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

2 பிரிவிலும் சேர்த்து மொத்தம் ஆயிரத்து 440 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அனல்மின் நிலையத்தின் 2வது பிரிவில் கொதிகலன் குழாயில் ஏற்பட்ட பழுது காரணமாக 600 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கொதிகலன் குழாயில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் பொறியாளர்கள் மற்றும் மின்சார ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Exit mobile version