திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணி அலுவலர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேர்தல் பணி மற்றும் பறக்கும் படை அலுவலர்களுக்கான ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பறக்கும் படை குழுக்கள் நிலை கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள், வீடியோ பார்வையிடும் குழுக்கள், உதவி கணக்கு செலவின குழுக்கள், மீடியா சான்றிதழ் அறிவிக்கும் குழு உள்ளிட்ட தேர்தல் பணியில் ஈடுபடும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்களிடம் அதிகாரிகள் நடந்து கொள்ள வேண்டிய விதம் குறித்தும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆலோசனைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் கண்காணிப்பில் ஈடுபடும் 24 பறக்கும் படை குழுவினரின் வாகனங்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்.

Exit mobile version