தேர்தல் விதிமீறல்: ஸ்டாலின் ஆலோசனை நடத்திய மண்டபத்திற்கு சீல்

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆம்பூரில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட போது விதிகளை மீறி உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் இஸ்லாமிய அமைப்பினருடன் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தேர்தல் நடத்தை விதிகளை மீறி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் துரைமுருகன், கதிர் ஆனந்த் உள்ளிடோரும் கலந்துகொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆம்பூர் வட்டாட்சியர் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் தனியார் திருமண மண்டபத்திற்கு சீல் வைத்தனர்.

Exit mobile version