இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் 29ம் தேதி பதவியேற்பு

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் வரும் 29 ஆம் தேதி பதவியேற்கின்றனர்.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி மற்றும் நெல்லை மாவட்டம் நாங்குநேரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் அமோக வெற்றி பெற்றனர். விக்கிரவாண்டியில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ் செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் புகழேந்தியை விட 44 ஆயிரத்து 924 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார். இதே போல், நாங்குநேரி தொகுதியில், அதிமுக வேட்பாளர் நாராயணன் 95 ஆயிரத்து 377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் ரூபி மனோகரனை விட 33 ஆயிரத்து 445 வாக்குகள் அதிகம் பெற்று அவர் வாகை சூடினார். இந்த நிலையில், வரும் 29 ஆம் தேதி இருவரும் எம்.எல்.ஏக்களாக பதவியேற்கின்றனர். சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்துவைக்கும் இந்த நிகழ்ச்சியில், முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

Exit mobile version