தேர்தல் கருத்து கணிப்புகள் திமுகவினரால் திணிக்கப்படும் ஒன்று-அமைச்சர் ஜெயகுமார்

தேர்தல் கருத்து கணிப்புகள் அனைத்தும் திமுகவினரால் திணிக்கப்படும் கணிப்புகள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் உள்ள மத்திய சென்னை பாமக வேட்பாளர் சாம்பால் அவர்களை ஆதரித்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் பிரச்சாரம் மேற்கொண்டார் முன்னதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசிய அவர், ஜாதி மதம் பேதமற்ற மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வரும் நிலையில், மதங்களை இழிவு படுத்தி பேசும் கி.வீரமணி போன்றோர் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக பேசிவருவது கண்டிக்கத்தக்கது என்றார்.

Exit mobile version