தேர்தல் பறக்கும் படை சோதனையில் சிக்கிய ரூ.12 லட்சம்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, பறக்கும் படையினர் நடத்திய சோதனையில், 12 லட்சம் ரூபாய் ரொக்கம் கைப்பற்றப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, பல்வேறு பகுதிகளில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், பள்ளிபாளையம் அருகே உள்ள எஸ்.பி.பி. காலணி பேருந்து நிறுத்தத்தில், பறக்கும் படையினர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, நாமக்கல்லில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்தில் சோதனை செய்ததில், ஈரோடு தனியார் சாயப்பட்டறை நிர்வாகிகள் மூன்ஷி வர்கீஸ், குமாரசாமி ஆகிய இருவரும், எந்த ஒரு ஆவணமும் இல்லாமல் 12 லட்சம் ரூபாய் ரொக்கத்தை பையில் வைத்திருந்தனர். இதையடுத்து, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் குமாரபாளையம் தாசில்தார் தங்கத்திடம் ஒப்படைக்கப்பட்டனர்.

Exit mobile version