அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. வீட்டில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.

திருச்செந்தூர் அருகே உள்ள தண்டுபத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தூத்துக்குடி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏவின் பண்ணை தோட்டத்தில் பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பறக்கும் படை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, தண்டுபத்தில் உள்ள அனிதா ராதகிருஷ்ணன் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். வேலூரில் துரைமுருகன் ஆதரவாளர் வீட்டில் நடைபெற்ற சோதனையில் கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டில் சோதனை நடத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version