திமுகவினருக்கு தேர்தல் ஜொரம் வந்துவிட்டது – எதிர்கட்சித் தலைவர்!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அதிமுக வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசினை ஆதரித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் சூறாவளி பிரச்சாரம் செய்துவருகிறார். தற்போது அவர்  வீரப்பன்சத்திரம் பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தில் பேசிய அவர்,

திமுகவினருக்கு தேர்தல் ஜொரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன். அவர்கள் காங்கிரஸ் வேட்பாளருக்கு தூதாக அவர்களின் அமைச்சர்களை இறக்கியுள்ளார்கள். மேலும் தேர்தலில் முறைகேடினை கையாண்டு வருகிறார்கள். மக்களுக்கு பணம் கொடுத்தும் பிரியாணி கொடுத்தும் அடைத்து வைத்து வாக்கை சேகரிக்கிறார்கள். மேலும் அவர்களுக்கு காவல்துறை துணைபோய் உள்ளது. கிட்டத்தட்ட காவல்துறை ஏவல் துறையாக செயல்படுகிறது. ஓடி ஓடி போஸ் கொடுத்து பிரச்சாரத்தில் கேளிக்கை செய்து வருகிறார்கள் திமுக அமைச்சர்கள். மேலும் அமைச்சர் கல் எடுத்து அடிக்கிறார்கள், திமுக எம்பி கையை வெட்டுவேன் என்கிறார்கள். தமிழகத்தில் ஒரேநாளில் ஒன்பது கொலை சம்பவம் நடந்துள்ளது. இதையெல்லாம் ஸ்டாலின் கண்டுகொள்ளாமல் இருக்கிறார். திமுக என்றாலே கலெக்சன் கரப்சன் என்று பேசிய எதிர்கட்சித் தலைவர் பெசினார். மேலும் அதிமுக வேட்பாளர் தென்னரசுவிற்கு வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டுக்கொண்டார். அவர் கூப்பிட்ட உடனே ஓடோடி உங்களுக்கு உழைக்கும் அன்பர், பண்பர் என்று பேசிய எதிர்கட்சித் தலைவர் இன்றைய பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

Exit mobile version