தமிழக அரசியல் கட்சியினருடன் தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை

தமிழக அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் இந்திய தேர்தல் ஆணையர்கள் இன்று ஆலோசனை நடத்துகின்றனர். தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று இரவு சென்னை வந்தனர். தலைமை தேர்தல் ஆணையர் சுனில் ஆரோரா இன்று காலை வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் குழுவினர்,இன்று மற்றும் நாளை தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர்.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் இன்று ஆலோசனை நடத்தவுள்ளனர். இதைத்தொடர்ந்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ, காவல் துறை இயக்குநர் ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், காவல் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Exit mobile version