தமிழக தேர்தல் குறித்து இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆலோசனை

சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள் குழு இன்று சென்னை வருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், கொரோனா முன்னேற்பாடுகளுடன் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசிப்பதற்காக இந்திய தேர்தல் ஆணைய பொதுச்செயலாளர் உமேஷ் சின்கா தலைமையிலான உயர்மட்ட குழு இன்று சென்னை வருகிறது. பகல் 12 மணியளவில் கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், அரசியல் கட்சிகளுடன் இக்குழுவினர் ஆலோசனை நடத்த உள்ளனர். தேர்தலை ஒரே கட்டமாக நடத்துவதா அல்லது 2 கட்டமாக நடத்துவதா என்பது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Exit mobile version