அருப்புக்கோட்டையில் 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல் ரத்து

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, இன்று நடைபெற இருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளது.

வில்லிபத்திரி ஊராட்சிக்கு உட்பட்ட 1, 3, 5, 6 ,7, 8 ஆகிய 6 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்கள் விண்ணப்பங்களில் வரிசைப்படி இல்லாததாலும், தவறுதலாக சின்னங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாலும் தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் அறிவித்துள்ளார்.

Exit mobile version