"விவசாயிக்கும், அரசியல் வியாபாரிக்கும் இடையில் நடைபெறும் தேர்தல்"

பெண்கள் குறித்து இழிவாக பேசியதாக நடிகர் ராதாரவியை கட்சியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், ஆ.ராசா மீது இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன் என அன்புமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

அரியலூர் அதிமுக வேட்பாளர் தாமரை ராஜேந்திரனை ஆதரித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி, பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், இந்த தேர்தல் விவசாயிக்கும், அரசியல் வியாபாரியான ஸ்டாலினுக்கு இடையே நடைபெறும் தேர்தல் என்றார். இதில் விவசாயி வெற்றி பெற மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். நடிகர் ராதாரவி, திமுகவிலிருந்த போது நயன்தாரா குறித்து அவதூறாக பேசியதாக, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கிய ஸ்டாலின், தற்போது ஆ.ராசா மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version