ஊடரங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி – எல்.முருகன் பயனாளிகளுக்கு வழங்கினார்

ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பாஜக தலைவர் எல்.முருகன் அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய மோடி கிட் நிவாரண தொகுப்பை  வழங்கினார். சென்னை தி.நகரில் உள்ள பாஜகவின் தலைமையகத்தில் பொதுமக்களுக்கு தேவையான மளிகை பொருட்கள் அடங்கிய ‘மோடி கிட்’ தொகுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜகவின் பல்வேறு பிரிவுகளை சார்ந்தவர்கள் நிவாரண உதவிகளை தொடர்ந்து வழங்கி வருவதாகவும், அந்த வகையில் தற்போது மோடி கிட் என்ற பெயரில் அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டார். இதுவரை ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேருக்கு மோடி கிட் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்த அவர், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் தாமாக முன்வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version