எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான வழக்கு இன்று விசாரணை 

எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கினை உச்சநீதிமன்றம் இன்று விசாரிக்க உள்ளது.

சென்னை – சேலம் இடையேயான எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான அறிவிப்பை செயல்படுத்தக் கோரி உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. புதிய 8 வழிசாலை திட்டத்தால் பல மாவட்டங்கள் தொழில் வளர்ச்சி அடையும் என்று தமிழக அரசு சார்பில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்கால தேவையை கருத்தில் கொண்டும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், எட்டு வழிச்சாலை திட்டம் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் முதல் வழக்காக இன்று விசாரணைக்கு வருகிறது.

Exit mobile version