திருவாரூர் அருகே அரசு பள்ளிக்கு ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கல்வி சீர்வரிசை

திருவாரூர் அருகே அரசு பள்ளிக்கு 80 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கல்வி சீர்வரிசையை மாணவர்களின் பெற்றோர்கள் வழங்கினர். திருவாரூர் மாவட்டம், மாங்குடி ஊராட்சிக்குட்பட்ட அரசு உயர்நிலைப்பள்ளி 15 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தநிலையில், சிறப்பாக செயல்பட்டு வரும் இப்பள்ளிக்கு தேவையான எழுது பொருட்கள், பீரோ, நாற்காலிகள், மின்விசிறி, குடிநீர் குடம் உள்ளிட்டவைகளை மாங்குடி கடைதெருவில் இருந்து 250க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஊர்வலமாக எடுத்து சென்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாரிமுத்து முன்னிலையில் பள்ளியின் தலைமையாசிரியரிடம் வழங்கினர்.

Exit mobile version