விருத்தாசலம் அருகே, அரசு பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி

விருத்தாசலம் அருகே, அரசு பள்ளியில் கல்வி சீர்வரிசை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் திருவிக நகர் நகராட்சி தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கற்றல் திறன் மேம்பட, அப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடி சுமார் ஒரு லட்சம் மதிப்பிலான கணினி, கற்றல் உபகரணங்கள், விளையாட்டு  உபகரணங்களை சீர்வரிசையாக கொண்டு வந்தனர். சீர்கொண்டு வந்தவர்களை வட்டார கல்வி அலுவலர், தலைமையாசியர் வரவேற்று சீர்வரிசை பொருட்களை பெற்று கொண்டனர். 

Exit mobile version