திருப்பூர் அருகே உள்ள அரசுப்பள்ளிக்கு பொதுமக்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் விழா

திருப்பூர் அருகே உள்ள அரசுப்பள்ளியில்  பொதுமக்கள் சார்பில் கல்விச் சீர் வழங்கும் விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் கொள்ளுபாளையத்தில் இயங்கி வரும், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் பல மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்தும் விதமாக, கணினி, எழுது பொருட்கள், புத்தகங்கள்  உள்ளிட்டவற்றை ஊர் பொதுமக்கள் கல்வி சீராக வழங்கினர். அவற்றை தாரை தப்பட்டையுடன் ஊர்வலமாக எடுத்து வந்து மாவட்ட கல்வி அலுவலர் முன்னிலையில் பொதுமக்கள் பள்ளியில் வழங்கினர். 

Exit mobile version