ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்

திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலிலுக்கு இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்றார். அங்கு அவருக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க பாசுரங்கள் பாடிய படி அர்ச்சகர்கள் முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை அளித்தனர். அதனை ஏற்றுக் கொண்டு உள்ளே சென்ற அவர் சாமி தரிசனம் செய்தார். பின்னர் முதலமைச்சர் அங்கிருந்த கோயில் யானை ஆண்டாளுக்கு பழங்கள் வழங்கினார்.

Exit mobile version