விஞ்ஞான காலத்திலும் பொய்களாகப் பேசிக் கொண்டிருக்கும் ஸ்டாலின் – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

விஞ்ஞான காலத்திலும் பொய்களாகப் பேசிக் கொண்டிருக்கும் ஸ்டாலினுக்கு, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தக்க பாடம் புகட்ட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தென்காசி மாவட்டம் கடையநல்லூர் பகுதியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். இதற்காக வருகை தந்த முதலமைச்சருக்கு, வழி நெடுகிலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

பின்னர் பொதுமக்களிடையே உரையாற்றிய முதலமைச்சர், நீதி தவறாமல் நடந்த காரணத்தால், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரும், புரட்சித்தலைவி ஜெயலலிதாவும் வரலாற்றில் நீங்கா இடம் பிடித்துள்ளதாக தெரிவித்தார். விஞ்ஞான காலத்திலும் பொய்களை பேசி, நாடகத்தை அரங்கேற்றி, வாக்குகளை பெற ஸ்டாலின் துடிப்பதாக முதலமைச்சர் விமர்சித்தார்.

 

 

தொடர்ந்து முதலமைச்சர் உரையாற்றி கொண்டிருந்த போது அவ்வழியே வந்த ஆம்புலன்ஸ் ,மக்கள் கூட்டத்தில் சிக்கியது. இதை கண்டு தனது பேச்சை நிறுத்தி, ஆம்புலன்ஸ் செல்ல வழிவிடுமாறு பொதுமக்களை கேட்டுகொண்டார். ஆம்புலன்ஸ் விரைந்து சென்ற பின் முதலமைச்சர் தனது பேச்சை தொடர்ந்தார்.

 

 

Exit mobile version