முதலமைச்சர் பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து!

தமிழ்ப்புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் …

இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தொன்மையும் இலக்கிய வளமும் கொண்ட உலகின் மூத்த குடியான தமிழ்ப் பெருமக்கள், பல்லாண்டு காலமாய் சித்திரை முதல்நாளை தமிழ்ப் புத்தாண்டாக கொண்டாடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

மலரும் இப்புத்தாண்டில், தமிழர்கள் அனைவரின் வாழ்விலும், அன்பும் அமைதியும் நிலவட்டும் என்றும் நலமும் வளமும் பெருகட்டும் என்றும் முதலமைச்சர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version