கொரோனா பாதிப்புக்கு அரசின் மெத்தனமே காரணம் – எடப்பாடி பழனிசாமி சாடல்

அரசின் மெத்தன போக்கால் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அவர், பின்னர் தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, கொரோனா தொற்று காரணமாக, சேலம் மாவட்டம் முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் படுக்கைகள் அனைத்தும் நிரம்பியுள்ளதாகத் தெரிவித்தார். சேலம் மாவட்டத்தில் ஆக்சிஜனுடன் கூடிய கூடுதல் படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

கொரோனாவால் ஏற்படும் மரணங்களை தமிழக அரசு மறைப்பதாக குற்றம்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, அரசு மருத்துவமனைகளில் உள்ள படுக்கை வசதிகளில் கூட அரசு பொய் கணக்கு காட்டுவதாக விமர்சித்தார்.

Exit mobile version