திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்கள் லட்சியம் – அதிமுக பொதுச்செயலாளர் சூளுரை!

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பேசியவற்றின் சுருக்கம் :

தேர்தல் ஆணையம் அதிமுக பொதுக் குழு தீர்மானம் செல்லும் என்று அறிவித்துள்ளது. அஇஅதிமுக இனி பிரதான கட்சியாக செயல்படும். அதிமுக வீறுநடையுடன் செயல்படும். பொது உறுப்பினர்களுக்கும், தலைமை கழக நிர்வாகிகளுக்கும், கழக உடன் பிறப்புகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றி. நீண்ட சட்டப்போராட்டம் நடத்தி வெற்றி பெற்றுள்ளோம். எங்கள் பணி வேறு. அதிமுக வை நேசிக்கிறர்கள் யாராக இருந்தாலும் இணைத்துக்கொள்வோம், ஒரு சிலரை தவிர கழகத்தின் செயல்பாடு தொடர்கிறது. பூத் கமிட்டி அமைக்கும் பணி தொடங்கியுள்ளோம். அனைத்து பூத்களிலும் இளைஞர், இளம் பெண்கள் பாசறை தொடங்க அறிவுறுத்தியுள்ளோம்.

சாதாரண தொண்டன்தான் நான். திமுக அரசை வீட்டுக்கு அனுப்புவதுதான் எங்கள் லட்சியம். எதிர்கட்சி துணை தலைவராக எங்கள் உறுப்பினர் பேரைவையில் செய்படுவார்கள். கர்நாடகாவில் எங்களின் அடையாளத்தை வெளிப்படுத்த ஒரு தொகுதியில் போட்டியிடுகிறோம். நிலையான வாக்குகள் உள்ளன. தமிழகத்தில் அதிமுக வுக்கு என்று நிலையான வாக்குகள் உள்ளன. அதிமுக விற்கு எங்குமே பலவீனம் கிடையாது. ஊடகத்தின் பாதுகாப்பிலேயே திமுக அரசு செயல்படுகிறது. ஆட்சிக்கு வந்த இரண்டு ஆண்டுகளில் எந்த புதிய திட்டங்களையும் திமுக அரசு அறிவிக்கவில்லை. அதிமுக வில் உள்ள அனைவருமே உழைக்கும் தொண்டர்கள்தான்.

எறும்பு போலவும், தேனீக்கள் போலவும் உழைப்பவர்கள் தான் அதிமுக வினர் எனவும் பேட்டி. அதிமுக தலைமை அலுவலகத்தை சீர்குலைத்தவர்கள் யார் என்ற உண்மையை யாரும் மறைக்க முடியாது. அதிமுக தலைமை அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்தவர்கள் யார் என்றும் அனைவருக்கும் தெரியும். பன்னீர்செல்வத்தின் மூலம் திமுக நடத்திய நாடகம் அதிமுக அலுவலகம் சூறையாடப்பட்டவை. புனிதமான இடத்தை சேதப்படுத்தியவர்கள் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிப்பார்கள். மதுரை மாநாடு இதுவரையில் நடந்திராத வகையில் நடக்கும்.

Exit mobile version