“பிரிட்டன் கொரோனா தமிழகத்தில் பரவாமல் தடுக்க நடவடிக்கை”

பிரிட்டன் கொரோனா தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் இருந்து கானொலி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து கேட்டறிந்தார். அப்போது உரையாற்றிய முதலமைச்சர், நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் கொரோனா தடுப்பூசி இலவசம் என முதலில் அறிவிக்கப்பட்டதாகக் கூறினார். தமிழ்நாட்டில் 97 புள்ளி 37 சதவீதம் பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளதாக தெரிவித்த அவர், பிற நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாமல் தொடர்ந்து கண்காணிக்கப்படுவதாகவும் கூறினார்.

Exit mobile version