ஆக்சிஜன் விநியோகத்தை அதிகரிக்க பிரதமருக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

தமிழகத்திற்கு, கூடுதலாக ஆக்சிஜன், ரெம்டெசிவிர் மற்றும் தடுப்பூகளை வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், கொரோனா இரண்டாம் அலை, தமிழ்நாட்டில் ஏராளமானோரை பாதித்துள்ளதாகவும், தினசரி பாதிப்பு 32 ஆயிரத்தை தொட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொரோனாவை கட்டுப்படுத்த, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்துவந்தாலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் படுக்கைகளின் தேவை அதிகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், நிலைமையை சமாளிக்க, தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் ஊசிகள் மற்றும் தடுப்பூசிகளின் அளவை அதிகரிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்

Exit mobile version