”அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஸ்டாலின் மிரட்டுகிறார்”-எதிர்க்கட்சி தலைவர்

அண்ணா திமுக ஆட்சியில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை என்றும், அதிகாரத்தை கையில் வைத்து கொண்டு ஸ்டாலின் மிரட்டுவதாக, எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

சேலம் மாவட்டம், கொங்கணாபுரத்தில் உள்ள அருந்ததியர் காலனியில், மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிட்ட அவர், பாதிக்கப்பட்ட 160 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கனமழையால் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை சுட்டிக்காட்டுவதற்கு பதிலளிக்காமல், அதிகாரத்தை வைத்துக்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் எதிர்க்கட்சியை மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், குடிமராமத்து திட்டத்தினால் தற்போது அனைத்து ஏரி, குளங்களிலும் நீர்நிரம்பியுள்ளதாக தெரிவித்தார். வெள்ள பாதிப்புகளுக்கான நிவாரண நிதியை மத்திய அரசிடம் தமிழக அரசு கோரினால், அதற்கு அதிமுக சார்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

 

Exit mobile version