கரூர், திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இன்று முதலமைச்சர் பிரசாரம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை இன்று தொடங்குகிறார்.

சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று 3-ம் கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்கும் முதலமைச்சர், கரூரில், அதிமுக வேட்பாளரும் அமைச்சருமான எம்.ஆர். விஜயபாஸ்கரை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார். இதனைத் தொடர்ந்து, பரமத்தி, வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், பழனி, செம்பட்டி, திண்டுக்கல், நத்தம் உள்ளிட்ட இடங்களில் அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்கவுள்ளார்.

 

Exit mobile version