அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக, அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் இன்று மாலை 6 மணியளவில், ஈரோட்டில் நடைபெறும் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் மற்றும் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவரும் கலந்துகொள்ள உள்ளனர். இதற்காக மாலை 4 மணியளவில், கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி, சேலத்தில் இருந்து புறப்படுகிறார். அவருக்கு வழியெங்கும் வரவேற்பு கொடுக்க, அதிமுக தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு, இடைக்கால பொதுச்செயலாளர் ஆலோசனைகளை வழங்கவுள்ளார்.

Exit mobile version