கஜா புயல் சீரமைப்பு பணியில் உயிரிழந்த மின் ஊழியரின் குடும்பத்தினருக்கு நிவாரணம்

கஜா புயல் பராமரிப்பு பணியின் போது, மின்சார விபத்தில் சிக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியரின் குடும்பத்தினருக்கு 13 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் தங்கமணி வழங்கினார்.

கடந்த நவம்பர் 20 ஆம் தேதி, நாமக்கல் மாவட்டம் மானுவக்காட்டுப்பாளையத்தை சேர்ந்த மின் ஊழியர் முருகேசன், புதுக்கோட்டையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, மின் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இந்நிலையில், அவரின் குடும்பத்தினருக்கு, 13 லட்சத்திற்கான நிவாரண உதவி காசோலையை, மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி வழங்கினார். பின்னர், பள்ளிபாளையம் பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள, தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து பார்வையிட்டார்.

Exit mobile version