கோவையில் உணவை வீணாக்காமல் சாப்பிட்டால் ”Cash Back”

கோவையில், உணவு வீணாவதை தடுக்க, தனியார் உணவகம் ஒன்று கேஷ் பேக் என்ற திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

கோவை மாவட்டத்தில் செயல்படும் தனியார் உணவகம் ஓன்று, உணவை வீணாக்காமல் உண்டால் ”Cash Back” வழங்கப்படும் என்று தெரிவித்து, வாடிக்கையாளர்கள் உணவை வீணடிப்பதை தடுத்து வருகிறது. மேலும், இங்கு உணவை வீணடிக்காமல் உண்டால், 5 ரூபாய் நாணயம் வழங்கப்படும் என்ற அறிவிக்கப்பட்டுள்ளது. உணவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாக, உணவகம் மேற்கொண்டுள்ள இந்த புதிய முயற்சிக்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த முயற்சிக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Exit mobile version