ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

புனித வெள்ளியன்று சிலுவையில் அறையப்படும் இயேசு கிறிஸ்து பின்னர் மூன்றாம் தினம் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் இன்று  கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன.

சென்னை சாந்தோம் தேவாலயத்தில், மயிலை பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இந்நிகழ்வில், புது நெருப்பு மந்திரிப்பு, பாஸ்காதிரி மந்திரிப்பு மற்றும் புனித நீர் தெளித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த ஈஸ்டர் பெருவிழாவில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு இயேசு கிறிஸ்துவை வழிபட்டனர்.

Exit mobile version