துரைமுருகன் மகனை வேட்பாளராக திமுக கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை- ஏ.சி சண்முகம்

துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்தை வேட்பாளராக நிறுத்தியதை அவருடைய கட்சியினரே ஏற்றுக்கொள்ளவில்லை என்றும், எனவே அவர் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவார் என அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் மாவட்டம் ஆம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அவர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்த போது ஆட்சி மாறும் காட்சி மாறும் என பேசிய அவர், மறுநாள் அவரது உதவியாளர் வீட்டில் நடத்திய சோதனையில் பல கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டதை அடுத்து எந்த முகத்தை வைத்துக்கொண்டு செய்தியாளர்களை சந்தித்தார் என்று கடுமையாக சாடினார். துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்தை வேட்பாளராக நிறுத்தியதை திமுகவினரே ஏற்றுக் கொள்ளவில்லை என்று கருத்து கூறிய ஏ.சி. சண்முகம், கட்சியினர் ஏற்றுக் கொள்ளாத ஒரு வேட்பாளர் எப்படி தேர்தலில் வெற்றி பெறுவார் என கேள்வி எழுப்பினார்.

Exit mobile version