துணை முதலமைச்சர் ஓ. பன்னிர்செல்வம் குடியரசு தின வாழ்த்து

இந்திய குடியரசு தினம் கொண்டாடப்படுவதை ஒட்டி, துணை முதலமைச்சரும், அதிமுக ஒருங்கிணைப்பளருமான ஓ.பன்னிர்செல்வம் குடியரசு தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்டு மக்களாட்சி மலர்ந்ததை நினைவு கூறும் வகையில், குடியரசு தினம் அனுசரிக்கப்படுவதாக, குறிப்பிட்டுள்ளார். இத்திருநாளில், தாய்த் திருநாட்டை வளமாக்கவும், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக்கவும், சமத்துவம் மற்றும் சமூக நீதி தழைத்தோங்கவும், சாதி, மத வேறுபாடுகள் கடந்து மக்கள் ஒற்றுமையுடன் உழைக்க வேண்டுமெனவும், தனது வாழ்த்துச் செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version