மதுரை அலங்காநல்லூரில் போலி பீடி பண்டல்கள் விற்ற இருவரை பீடி நிறுவன ஊழியர்களே பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

மதுரை அலங்காநல்லூரில் பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பீடி பண்டல்கள் விற்ற இருவரை பீடி நிறுவன ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

மதுரை அலங்காநல்லூர் பகுதிகளில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியாக பீடிகளை
தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதனால் தனியார் பீடி நிறுவன ஊழியர்கள் போலி நிறுவனங்களை கண்டறிந்து பிடிக்க, பல இடங்களில் சோதனை நடத்தினர்.

அப்போது போலி பீடி பண்டல்களை விற்பனை செய்த 2 பேரை பிடித்து அலங்காநல்லூர் போலீசில் ஒப்படைத்தனர். விசாரனையில் போலி பீடி பண்டல்கள், டீ தூள் பாக்கெட்கள், பல்பொடி என பிரபல நிறுவனங்கள் பெயரில் போலி பொருள்களை விற்பனைக்கு எடுத்து வந்தது தெரிய வந்தது.

அவர்களிடமிருந்து 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான 247 போலி பீடி பண்டல்களும், ஆம்னி வேனும் பறிமுதல் செய்யப்பட்டது.

Exit mobile version