தொண்டர்கள் வராததால் வெறிச்சோடிய திமுக பொதுக்கூட்டம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் திமுக பொதுக்கூட்டத்துக்குத் தொண்டர்களும், பொதுமக்களும் வராததால் ஏமாற்றமடைந்த அக்கட்சி நிர்வாகிகள் கூட்டத்தை பாதியிலேயே முடித்தனர்.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் திமுக பொதுக் குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஏற்கெனவே பொதுக்கூட்டத்துக்குக் குறைந்த எண்ணிக்கையில் தொண்டர்கள் வந்திருந்ததால் நாற்காலிகள் காலியாகக் கிடந்தன. இந்நிலையில் திமுக நிர்வாகிகள் மேடையில் பேசிக் கொண்டு இருந்தபோதே பொதுமக்கள் பாதியிலேயே எழுந்து சென்றனர். இதனால் திமுக பொதுக் குழுத் தீர்மான விளக்கக் கூட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது.

Exit mobile version