கனமழை காரணமாக தேனி மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு

தேனி மாவட்டம் வருசநாடு, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளிமலை, உடங்கல், ஓயம்பாறை, வருசநாடு, உள்ளிட்ட மலைப்பகுதிகளில் நேற்றிரவு விடிய விடிய பெய்த கனமழை காரணமாக மூல வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வைகை அணையின் நீர் மட்டம் 58 புள்ளி 83 அடியாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் வைகை அணையில் இருந்து மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் விவசாயத்திற்காக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடலில் கலக்காத நதியாக விளங்கும் வைகை ஆற்றில் 2மாதத்தில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version