காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,593 கனஅடியாக அதிகரித்துள்ளது.

ஆயிரத்து 336 கனஅடியாக இருந்த அணையின் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 3 ஆயிரத்து 593கனஅடியாக அதிகரித்துள்ளது. தற்போது காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவால், அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 100 புள்ளி 15 அடியாகவும், நீர் இருப்பு 65 புள்ளி 35 டி.எம்.சியாகவும் உள்ளது. அதேபோல், குடிநீர் தேவைக்காக அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

Exit mobile version