கனமழையால் சம்பா சாகுபடி அறுவடை பாதிப்பு .விவசாயிகள் வேதனை!

நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்து நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. கனமழை தொடர்ந்து நீடித்தால் வயலில் தேங்கிய மழைநீர் வடியாமல் நெல்மணிகள் அழுகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Exit mobile version